சூளகிரி அருகே உள்ள சின்னகானப்பள்ளி யோகராஜ் அவர்களின் நிலத்தில் நிலம் சீர் செய்யும் போது அந்த இடத்தில் 3 அடி உயரமும் ஒன்னரை அடி அகலமும் கொண்ட சூலம் செதுக்கப்பட்ட கல் ஒன்று இருப்பதாக தொல்லியல் ஆய்வாளர் சதாநந்தகிருஷ்ணன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் கூறியதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் வரலாற்று ஆய்வுக்குழுவும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது அந்த சூலக்கல்லில் கல்வெட்டுகள் இருப்பதாககவும் அந்த கல்வெட்டு கூறும் செய்தி கோவில் கட்டி தேவதானமாக விட்டோம் 6வரி கல்வெட்டாக செதுக்கி உள்ளனர்  என்று கூறினார் அவர் மேலும் கூறுகையில்

 

தேவதானமாக வழங்கப்படும் நிலங்களை அடையாளப்படுத்தும் வகையில் வைணவ கோயில்களுக்கு (பெருமாள் கோயில்) சங்கு சக்கர குறியீடு பொறித்த திருவாழிக்கல்லும்சமண கோயில் நிலங்களுக்கு முக்குடைக்கல்லும்,சைவக்கோயில்களான சிவன் , காளி , உள்ளிட்ட கோயில் நிலங்களில் திரிசூலக்குறியுடைய கற்களும் நடப்பட்டிருப்பது பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் நமது மாவட்டத்தில் கண்டறியப்பட்ட முதல் சூலம் மற்றும் கல்வெட்டுடன் நடப்பட்டுள்ள  எல்லைக்கல் இதுவாகும்

ள்ள கோவில்களுக்கு  வரி நீக்கப்பட்ட இறையிலி தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலங்களில் இருந்து கிடைக்கும் வருவாய் கோவிலின் தினசரி வழிபாட்டு செலவீனத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் .என்பது இதுவரை கிடைத்த கல்வெட்டுகளில் இருந்து தெரியவருகிறது.இதற்கு 2 கிலோமீட்டர் தள்ளி மற்றோர் சூலக்கல்வெட்டு காணப்படுகிறது அது மற்றோர் எல்லையாக இருக்க கூடும் மேலும் இன்னும் இரண்டு சூலக்கற்களும் ஒரு கல்வெட்டும் அருகே உள்ள நிலங்களில் இருக்ககூடும். அவை கிடைத்தால் மேலும் விவரங்கள் தெரியவரும் இங்குள்ள நிலத்தில் சிறு தரைகோட்டையும் கண்கானிப்பு கோபுரமும் அழிந்த நிலையில் காணப்படுகின்றன. ஆய்வுப்பணியில் நாரயனமூர்த்தி , சதாநந்தகிருஷ்ணகுமார்,பிரகாஷ் ,.தமிழ்செல்வன் ஆகியோர் ஈடுபட்டனர் 

 

 

 

Comments